வங்கிகளில் கிளார்க், அதிகாரிகள் உட்பட 7,082 பணியிடங்களுக்கு விண்ணப்பம்
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் கிளார்க், புரொபஷனரி ஆபீசர், மானேஜிங் டிரைனி உள்ளிட்ட நிலையில் காலி பணியிடங்கள் உள்ளன. ஐபிபிஎஸ் தேர்வு எழுதி ஸ்கோர் கார்டு வைத்திருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். கிளார்க் நிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஐபிபிஎஸ் தேர்வு எந்த மாநிலத்தில் எழுதியுள்ளனரோ அந்த மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ண ப்பிக்க இயலும்.
விண்ணப்பிக்கின்றவர்கள் சம்பந்தப்பட்ட மாநில மொழி பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். பாங்க் ஆப் இந்தியா, தேனா பாங்க், ஆந்திரா பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அன்ட் சிந்து பாங்க் ஆகியவற்றில் மட்டும் மொத்தம் 6,182 கிளார்க் பணியிடங்கள் உள்ளன.
பஞ்சாப் அன்ட் சிந்து பாங்கில் கிளார்க்குக்கு சிங்கிள் விண்டோ ஆப்ரேட்டர்,ஏ நிலையில் விண்ணப்பிக்கலாம். இதில் 800 காலியிடங்கள் உள்ளன. புரொபஷனரி ஆபீசர் (probationary officer) நிலையில் 900 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கிளார்க் பணிக்கு மே 18 வரை விண்ணப்பிக்கலாம். பிஓ நிலைக்கு மே 10 வரை விண்ணப்பம் பெறப்படும். மேலும், விபரங்களுக்கு www.psbindia.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
பாங்க் ஆப் இந்தியாவில் 3,149 கிளார்க் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம். மாநில ரீதியில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு www.bankofindia.co.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேனா வங்கியில் 1,090 கிளார்க் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மே 2 கடைசி நாள். விபரங்களுக்கு www.denabank.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஆந்திரா வங்கியில் 600 கிளார்க் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் முறையில் மே 5 வரை விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி www.andhrabank.in மேலும், பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் 543 கிளார்க் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் முறையில் மே 10 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Related :
குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் ...
வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் ...
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் ...
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ...
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி ...
VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் ...
1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, ...
கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு
1870 பணியிடங்களுக்காக 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதிய கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ...
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் ...
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பொருளாதாரம், வணிகவியல், கணிதம், புள்ளியியல், சட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.வருமானவரித்துறை ...